ஆசைக்கவிதைகள் - 47
தென்கடல் தான் அடங்கிடுமா?
உலகவரலாறும் இலக்கியங்களும் தென்கடலால் ஏற்பட்ட அழிவுகளைச் சொல்கின்றன. கதிர்காமத்தின் நாட்டுப்பாடலான இதுவும் தென்கடலின் சீற்றத்தை “தென்கடல்தான் அடங்கிடுமா?” என்று அங்கு வாழ்ந்த தமிழ்மக்களின் நெஞ்சத்து ஏக்கத்துடன் எடுத்துச் சொல்கிறது.
தீக்கோழி தினவெடுக்க
தீக்காற்று வீசயில
தூக்கணாம் குருவிக்கூடு
துடிதுடித்து ஆடயில
கார்மேகம் கருகருக்க
காகங்கள் கரையயில
ஊர்குருவி சத்தமிட்டு
ஊரெல்லாம் பதபதைக்க
தேன்குருவி பாடிடுமா?
தெம்மாங்கு கேட்டிடுமா?
தென்றல்வந்து வீசிடுமா?
தென்கடல்தான் அடங்கிடுமா?
- நாட்டுப்பாடல் (கதிர்காமம்)
பண்டிதர் மு ஆறுமுகன் நாட்டுப்பாடல் தேட்டத்திலிருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக